Translate

Saturday 16 April 2016

சீமை கருவேல மர அழிப்பு தீர்ப்பு


விழிப்புணர்வு நோட்டிஸ்


மரக்கன்று வழங்கியது.


மாங்காடு மரக்கன்று வழங்கியது


கொத்தமங்கலம் கிழக்கு தொடக்கப்பள்ளி


வாழை இலை

வாழை இலையின் பயன்கள்
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்
மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.
மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் நம்நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அவை மேடாக குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.
புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்கிரகித்து பூமியை மிதமான வெப்பநிலையில் வைத்திருப்பதில் மரங்களின் பங்கு முதன்மையானது.
மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ளன. பறவைகள் பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு மரங்களால் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில் மனிதனின் சுய நலனுக்காக அவை பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டும் வருகின்றன.
சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மரங்களைப் போன்று காடுகளை வளர்க்க முடியாது. காடுகளானது மரங்கள் மட்டும் அடங்கியவையல்ல. அவை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டவை. காடுகளின் இயல்பான போக்கினை மனிதனால் கொண்டுவர முடியாது.
காடுகளில் அடர்த்தியான மரங்கள் இருப்பதால் மண்வளம் அதிக அளவு பாதுகாக்கப்படுகிறது. பூமியின் மேல் விழும் மழையின் வேகத்தை, காட்டிலுள்ள தாவரங்கள் தங்கள் மீது தாங்கிக் கொள்கின்றன. மழை நேரடியாக பூமியின் மீது விழுந்தால் நிலப்பரப்பின் மேல் மண் தண்ணீரோடு அரித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும். அப்படித் தொடர்ந்து பலவீனம் அடைந்தால் நிலச்சரிவு ஏற்படும். அவை நிகழாமல் காடுகளில் உள்ள தாவரங்கள் காப்பாற்றுகின்றன. தாவரங்கள் வேர்களை நிலத்தின் உள்பரப்பி நிலத்தை கெட்டிப்படுத்துகின்றன.
சிலவகைத் தாவரங்கள் தங்களுக்கு இருக்கும் நீரை நீராவியாக வெளியேற்றுகின்றன. அது காற்றை ஈரப்பசையாக்கி வறண்ட நிலையை மாற்றுகின்றன.
இந்நிலையில் காடுகள் அழிக்கப்படும்போது அவற்றிலுள்ள விலங்குகள் அழியவும், இடம் பெயரவும் நேரிடும். வன விலங்குகள் அழிவதால் ஏராளமான இழப்புகள் ஏற்படுவது நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக யானைகள் வெளியிடும் சாணம் சிலவகை மரங்கள் வளர உதவுகிறது. அவற்றால் காடுகளில் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகி மண்ணின் வளம் அதிகரிக்கவும், சிலவகை தாவரங்கள் வளரவும் உதவுகிறது. எனவே காடுகளை இனிமேலாவது அழிக்காமல் இருப்பவற்றை பாதுகாக்கச் செய்தாலே போதுமானது.
காடுகளில் மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை பிடித்து தண்டிக்கும் அரசுதான், வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் பெரும்பாலான காடுகளை அழித்துள்ளது.
அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்பை நினைவு கூரலாம். கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சார்ந்த ஆன்மிகப் பகுதிகளிலும், இதர சுற்றுலாப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறிய கட்டடங்கள் பெருகியதும் அதற்காக அங்குள்ள இயற்கை வளங்களை அழித்ததுமே அங்கு ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.
அங்கு கட்டப்பட்டிருந்த விடுதிகள் வெள்ளம் காரணமாக சீட்டுக்கட்டுகள் போன்று சரிந்து விழுந்தன. பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். மண்ணரிப்பின் காரணமாகவே அவை நிகழ்ந்தன. ஏராளமான மரங்களை வெட்டி எறிந்துவிட்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. அதுவே முன்பு போல் மரங்கள் அடர்ந்திருந்தால் அவற்றின் வேர்கள் மண்ணை இறுகப்பற்றி நிலச்சரிவைத் தடுத்திருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்க்க முயற்சிக்க வேண்டும். இடவசதி இல்லாதவர்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்களில் வளர்க்க முயற்சிக்கலாம். குடியிருப்பு வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என